சென்செக்ஸ் 210 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.21 லட்சம் கோடி நஷ்டம்

 

சென்செக்ஸ் 210 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.21 லட்சம் கோடி நஷ்டம்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, லாக்டவுனை பல மாநிலங்கள் நீட்டித்து வருவது, அன்லாக் 2.0 குறித்த சந்தேகங்கள், சர்வதேச பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தம், கராச்சி பங்குச் சந்தையில் தீவிரவாதிகள் தாக்குதல் போன்ற பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவை சந்தித்தது.

சென்செக்ஸ் 210 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.21 லட்சம் கோடி நஷ்டம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எச்.டி.எப்.சி. வங்கி, ஐ.டி.சி., இந்துஸ்தான் யூனிலீவர், பார்தி ஏர்டெல் மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஆக்சிஸ் வங்கி, டெக் மகிந்திரா, ஸ்டேட் வங்கி, எல் அண்டு டி, இன்போசிஸ், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 210 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.21 லட்சம் கோடி நஷ்டம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,146 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,639 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 140 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.139.58 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.1.21 லட்சம் கோடியை இழந்தனர்.

சென்செக்ஸ் 210 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.21 லட்சம் கோடி நஷ்டம்
இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 209.75 புள்ளிகள் சரிந்து 34,961.52 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 70.60 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 10,312.40 புள்ளிகளில் முடிவுற்றது.