5 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.29 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 440 புள்ளிகள் உயர்ந்தது..

 

5 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.29 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 440 புள்ளிகள் உயர்ந்தது..

கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரையிலான வரையிலான 5 வர்த்தக தினங்களில் ஒட்டு மொத்த அளவில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிப்பு, இந்தியா-சீனா மோதல், கொரோனா வைரஸ், நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த வாரத்தின் முதல் 2 தினங்கள் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம், அதற்கு அடுத்த 2 தினங்களும் சரிவை சந்தித்து ஏமாற்றம் அளித்தது. நேற்று பங்கு வர்த்தகம் எழுச்சியுடன் முடிவடைந்தது.

5 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.29 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 440 புள்ளிகள் உயர்ந்தது..

கடந்த 5 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.140.79 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.137.50 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3.29 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

5 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.29 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 440 புள்ளிகள் உயர்ந்தது..

நேற்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 439.54 புள்ளிகள் உயர்ந்து 35,171.27 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 138.60 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,383.00 புள்ளிகளில் முடிவுற்றது.