சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்…. ரூ.1.68 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்…

 

சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்…. ரூ.1.68 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்…

தொடர்ந்து 2 வர்த்தக தினங்களாக ஏற்றம் கண்டு வந்த பங்கு வர்த்தகம் இன்று சரிவை சந்தித்தது. முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்தது. உலக கட்டண யுத்தம், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது.

சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்…. ரூ.1.68 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்…

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐ.டி.சி., நெஸ்லே இந்தியா மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட மொத்தம் 6 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, பவர் கிரிட், ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் வங்கி மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட மொத்தம் 24 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்…. ரூ.1.68 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்…

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,263 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,464 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 136 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.139.55 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.1.68 லட்சம் கோடி நஷ்டம் எற்பட்து

சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்…. ரூ.1.68 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்…

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 561.45 புள்ளிகள் சரிந்து 34,868.98 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 165.70 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 10,305.30 புள்ளிகளில் முடிவுற்றது.