முதலீட்டாளர்களுக்கு ரூ.1.56 லட்சம் கோடி லாபம்.. சென்செக்ஸ் 180 புள்ளிகள் உயர்ந்தது

 

முதலீட்டாளர்களுக்கு ரூ.1.56 லட்சம் கோடி லாபம்.. சென்செக்ஸ் 180 புள்ளிகள் உயர்ந்தது

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. பின்னர் சிறிது சரிவு ஏற்பட்டாலும் தொடர்ந்து பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏறுமுகத்தில் இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு ஆரம்பத்தில் உயர்ந்தது, சில நிறுவனங்கள் குறித்து எதிர்பார்ப்புகள் போன்ற பல காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

முதலீட்டாளர்களுக்கு ரூ.1.56 லட்சம் கோடி லாபம்.. சென்செக்ஸ் 180 புள்ளிகள் உயர்ந்தது

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பைனான்ஸ், பவர் கிரிட், கோடக் மகிந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, என்.டி.பி.சி. வங்கி மற்றும் டெக் மகிந்திரா உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், எச்.டி.எப்.சி. நிறுவனம், ஓ.என்.ஜி.சி., டி.சி.எஸ்., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

முதலீட்டாளர்களுக்கு ரூ.1.56 லட்சம் கோடி லாபம்.. சென்செக்ஸ் 180 புள்ளிகள் உயர்ந்தது

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,874 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 872 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 171 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.139.06 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று மட்டும் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.56 லட்சம் கோடி லாபம் சம்பாதித்தனர்.

முதலீட்டாளர்களுக்கு ரூ.1.56 லட்சம் கோடி லாபம்.. சென்செக்ஸ் 180 புள்ளிகள் உயர்ந்தது

இன்றைய வர்த்தகத்தின் நிறைவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 179.59 புள்ளிகள் உயர்ந்து 34,911.32 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 66.80 புள்ளிகள் அதிகரித்து 10,311.20 புள்ளிகளில் முடிவுற்றது.