களை கட்டிய பங்கு வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.94 லட்சம் கோடி லாபம்….

 

களை கட்டிய பங்கு வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.94 லட்சம் கோடி லாபம்….

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வர்த்தகத்தின் ஆரம்பத்தில் ஏற்றத்துடன் தொடங்கியது. வாகன விசாரணைகள் மற்றும் முன்பதிவு நடவடிக்கையில் முன்னேற்றம ஏற்பட தொடங்கியுள்ளதால் வாகன துறையை சேர்ந்த பல நிறுவன பங்குகளின் விலை ஏற்றம் காண தொடங்கியது. முத்தூட் பைனான்ஸ் உள்பட பல நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

களை கட்டிய பங்கு வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.94 லட்சம் கோடி லாபம்….

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் பைனான்ஸ், கோடக்மகிந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா, ரிலையன்ஸ், ஹீரோமோட்டோகார்ப் மற்றும் டாடா ஸ்டீல் உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. இந்துஸ்தான் யூனிலீவர், ஓ.என்.ஜி.சி., டி.சி.எஸ். மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

களை கட்டிய பங்கு வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.94 லட்சம் கோடி லாபம்….

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,889 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 723 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 137 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.135.49 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.94 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

களை கட்டிய பங்கு வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.94 லட்சம் கோடி லாபம்….

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 700.13 புள்ளிகள் உயர்ந்து 34,208.05 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 210.50 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,091.65 புள்ளிகளில் முடிவுற்றது.