சென்செக்ஸ் 97 புள்ளிகள் சரிவு….. முதலீட்டளார்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி லாபம்

 

சென்செக்ஸ் 97 புள்ளிகள் சரிவு….. முதலீட்டளார்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி லாபம்

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு தீவிரமாகி வருவது, இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்சினை மற்றும் சில நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் முதலீட்டளார்களுக்கு திருப்திகரமாக அமையவில்லை இது போன்ற காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தடுமாற்றம் கண்டது. இறுதியில் சரிவுடன் பங்கு வர்த்தகம் முடிவடைந்தது.

சென்செக்ஸ் 97 புள்ளிகள் சரிவு….. முதலீட்டளார்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி லாபம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மாருதி, பார்தி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், சன்பார்மா மற்றும் டைட்டன் உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், கோடக் மகிந்திரா வங்கி, ஐ.டி.சி., மகிந்திரா அண்டு மகிந்திரா, பவர் கிரிட், எச்.டி.எப்.சி. மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 97 புள்ளிகள் சரிவு….. முதலீட்டளார்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி லாபம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,435 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,122 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 163 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.133.55 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று பங்குச் சந்தையில் முதலீட்டளார்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.11 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 97 புள்ளிகள் சரிவு….. முதலீட்டளார்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி லாபம்

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 97.30 புள்ளிகள் குறைந்து 33,507.92 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 32.85 புள்ளிகள் சரிந்து 9,881.15 புள்ளிகளில் முடிவுற்றது.