மரண அடி வாங்கி தப்பி பிழைத்த பங்குச் சந்தைகள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.83 ஆயிரம் கோடி லாபம்…

 

மரண அடி வாங்கி தப்பி பிழைத்த பங்குச் சந்தைகள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.83 ஆயிரம் கோடி லாபம்…

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை குறித்து கவலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் விலை சரிவு கண்டு வருகிறது. அமெரிக்க பங்குச் சந்தைகளில் சரிவு, பலகீனமான ஆசிய பங்குச் சந்தை நிலவரங்கள் மற்றும்கொரோனா வைரஸ் தொடர்பாக இரண்டாவது அலை காரணமாக பொருளாதார மீட்பு தாமதமாகும் என்று முதலீட்டாளர்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிவு, மகிந்திரா உள்ளிட்ட பல நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் மோசமாக இருந்தது போன்ற பல்வேறு காரணங்களால் பங்குச் சந்தைகளில் தொடக்கத்தில் வர்ததகம் பலத்த அடி வாங்கியது. இருப்பினும் பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் மெதுமெதுவாக சரிவிலிருந்து வர்த்தகம் மீண்டு ஏற்றம் கண்டது.

மரண அடி வாங்கி தப்பி பிழைத்த பங்குச் சந்தைகள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.83 ஆயிரம் கோடி லாபம்…

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மகிந்திரா அண்டு மகிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டைட்டன் மற்றும் பஜாஜ ஆட்டோ உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஓ.என்.ஜி.சி., டெக் மகிந்திரா, பவர்கிரிட், இன்போசிஸ், கோடக்மகிந்திரா வங்கி மற்றும் டி.சி.எஸ். உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மரண அடி வாங்கி தப்பி பிழைத்த பங்குச் சந்தைகள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.83 ஆயிரம் கோடி லாபம்…

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,246 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,256 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 151 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.133.98 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.83 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

மரண அடி வாங்கி தப்பி பிழைத்த பங்குச் சந்தைகள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.83 ஆயிரம் கோடி லாபம்…

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 242.52 புள்ளிகள் உயர்ந்து 33,780.89 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 70.90 புள்ளிகள் ஏற்றம் கண்டு 9,972.90 புள்ளிகளில் நிலை கொண்டது.