முதலீட்டாளர்களுக்கு ரூ.88 ஆயிரம் கோடி லாபம்… சென்செக்ஸ் 290 புள்ளிகள் உயர்ந்தது…

 

முதலீட்டாளர்களுக்கு ரூ.88 ஆயிரம் கோடி லாபம்… சென்செக்ஸ் 290 புள்ளிகள் உயர்ந்தது…

பங்குச் சந்தைகளில் நேற்று வர்த்தகம் பலத்த அடி வாங்கியது. இதனால் இன்று பங்கு வர்த்தகம் எப்படி இருக்குமோ என்ற குழப்பமான நிலையில் முதலீட்டாளர்கள் இருந்தனா். ஆனால் இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

முதலீட்டாளர்களுக்கு ரூ.88 ஆயிரம் கோடி லாபம்… சென்செக்ஸ் 290 புள்ளிகள் உயர்ந்தது…

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.டி.எப்.சி. நிறுவனம், கோடக்மகிந்திரா வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஹீரோமோட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல் மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

முதலீட்டாளர்களுக்கு ரூ.88 ஆயிரம் கோடி லாபம்… சென்செக்ஸ் 290 புள்ளிகள் உயர்ந்தது…

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,525 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,025 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 157 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.135.58 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.88 ஆயிரம் கோடி லாபம் பார்த்தனர்.

முதலீட்டாளர்களுக்கு ரூ.88 ஆயிரம் கோடி லாபம்… சென்செக்ஸ் 290 புள்ளிகள் உயர்ந்தது…

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 290.36 புள்ளிகள் உயர்ந்து 34,247.05 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 69.50 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,116.15 புள்ளிகளில் முடிவுற்றது.