சென்செக்ஸ் 409 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.89 ஆயிரம் கோடி லாபம்…

 

சென்செக்ஸ் 409 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.89 ஆயிரம் கோடி லாபம்…

தொடர்ந்து கடந்த சில தினங்களாக ஏற்றம் கண்டு வந்த பங்கு வர்த்தகம் நேற்று சரிவை சந்தித்தது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் மீண்டும் சிறிது அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது.

சென்செக்ஸ் 409 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.89 ஆயிரம் கோடி லாபம்…

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் பைனான்ஸ், ஸ்டேட் வங்கி, டாடா ஸ்டீல், எச்.டி.எப்.சி. நிறுவனம் மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம், ஓ.என்.ஜி.சி., டெக்மகிந்திரா, மாருதி மற்றும் டி.சி.எஸ். உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 409 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.89 ஆயிரம் கோடி லாபம்…

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,430 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,271 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 150 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.144.31 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.89 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 409 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.89 ஆயிரம் கோடி லாபம்…

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 408.68 புள்ளிகள் உயர்ந்து 36,737.69 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 107.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,813.45 புள்ளிகளில் முடிவுற்றது.