சென்செக்ஸ் 346 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.21 லட்சம் கோடி நஷ்டம்

 

சென்செக்ஸ் 346 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.21 லட்சம் கோடி நஷ்டம்

கடந்த சில தினங்களாக ஏற்றம் கண்டு வந்த பங்கு வர்த்தகம் சரிவை கண்டது. இன்று காலையில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது. பின்னர் பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் நிலவியது. மதியம் 2 மணிக்கு மேல் பங்குச் சந்தைகளில் தொடர் சரிவு ஏற்பட்டது. பல நிறுவன பங்குகளின் விலை உயர்ந்து இருந்ததால் முதலீட்டாளர்கள் லாபம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர். இதுவும் பங்குச் சந்தை சரிவுக்கு ஒரு காரணம்.

சென்செக்ஸ் 346 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.21 லட்சம் கோடி நஷ்டம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி, ஸ்டேட் வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் டாடா ஸ்டீல் உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பஜாஜ் பைனான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், மாருதி , இன்போசிஸ் மற்றும் டைட்டன் உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 346 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.21 லட்சம் கோடி நஷ்டம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,243 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,515 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 161 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.143.48 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.1.21 லட்சம் கோடியை இழந்தனர்.

சென்செக்ஸ் 346 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.21 லட்சம் கோடி நஷ்டம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 345.51 புள்ளிகள் சரிந்து 36,329.01 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 93.90 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 10,705.75 புள்ளிகளில் முடிவுற்றது.