பங்குச் சந்தைகளில் தொடர் ஏற்றம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.91 ஆயிரம் கோடி லாபம்..

 

பங்குச் சந்தைகளில் தொடர் ஏற்றம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.91 ஆயிரம் கோடி லாபம்..

தொடர்ந்து 3வது நாளாக இன்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வர்த்தகத்தின் இடையே 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. இன்டெல் கேப்பிட்டல் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்கிறது என்ற தகவலால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை அதிகரித்தது இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் நன்றாக இருந்தது.

பங்குச் சந்தைகளில் தொடர் ஏற்றம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.91 ஆயிரம் கோடி லாபம்..

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பார்தி ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பவர் கிரிட் மற்றும் டைட்டன் உள்பட மொத்தம் 19 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. இண்டஸ்இந்த் வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி, டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்பட மொத்தம் 11 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்குச் சந்தைகளில் தொடர் ஏற்றம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.91 ஆயிரம் கோடி லாபம்..

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,357 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,376 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 156 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.142.50 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.91 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

பங்குச் சந்தைகளில் தொடர் ஏற்றம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.91 ஆயிரம் கோடி லாபம்..
இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 177.72 புள்ளிகள் உயர்ந்து 36,021.42 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 55.65 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,607.35 புள்ளிகளில் முடிவுற்றது.