மீண்டும் அள்ளி கொடுத்த பங்கு வர்த்தகம்.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.08 லட்சம் கோடி லாபம்..

 

மீண்டும் அள்ளி கொடுத்த பங்கு வர்த்தகம்.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.08 லட்சம் கோடி லாபம்..

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வர்த்தகத்தின் இடையே உயர்ந்தது, கொரோனா வைரசுக்கான தடுப்பூசி உருவாக்கத்தில் முன்னேற்றங்கள் உள்பட பல்வேறு காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் நல்ல ஏற்றத்துடன் முடிவடைந்தது.

மீண்டும் அள்ளி கொடுத்த பங்கு வர்த்தகம்.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.08 லட்சம் கோடி லாபம்..

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பவா்கிரிட், எச்.டி.எப்.சி. நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, மாருதி, கோடக் மகிந்திரா வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட மொத்தம் 19 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பஜாஜ் பைனான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பார்தி ஏர்டெல், சன்பார்மா மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட மொத்தம் 11 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மீண்டும் அள்ளி கொடுத்த பங்கு வர்த்தகம்.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.08 லட்சம் கோடி லாபம்..

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,441 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,245 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 163 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.147.23 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.08 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

மீண்டும் அள்ளி கொடுத்த பங்கு வர்த்தகம்.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.08 லட்சம் கோடி லாபம்..

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 511.34 புள்ளிகள் உயர்ந்து 37,930.33 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 140.05 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,162.25 புள்ளிகளில் முடிவுற்றது.