களை கட்டிய பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 399 புள்ளிகள் உயர்வு.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.27 லட்சம் கோடி லாபம்

 

களை கட்டிய பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 399 புள்ளிகள் உயர்வு.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.27 லட்சம் கோடி லாபம்

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரா இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வர்த்தகத்தின் இடையே உயர்ந்தது, பிரிட்டானியா, எச்.டி.எப்.சி.வங்கி உள்பட பல முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

களை கட்டிய பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 399 புள்ளிகள் உயர்வு.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.27 லட்சம் கோடி லாபம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் பைனான்ஸ், எச்.டி.எப்.சி. வங்கி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், டெக் மகிந்திரா மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், சன்பார்மா, என்.டி.பி.சி., மாருதி, ஐ.டி.சி. மற்றும் எல் அண்டு டி உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

களை கட்டிய பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 399 புள்ளிகள் உயர்வு.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.27 லட்சம் கோடி லாபம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,518 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,168 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 188 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.146.15 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.27 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

களை கட்டிய பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 399 புள்ளிகள் உயர்வு.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.27 லட்சம் கோடி லாபம்
இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 398.85 புள்ளிகள் உயர்ந்து 37,418.99 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 120.50 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,022.20 புள்ளிகளில் முடிவுற்றது.