மீண்டும் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.69 ஆயிரம் கோடி லாபம்..

 

மீண்டும் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.69 ஆயிரம் கோடி லாபம்..

லார்சன் அண்டு டூப்ரோ இன்போடெக், இன்போசிஸ் உள்பட சில நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கி குவித்தது, கச்சா எண்ணெய் உற்பத்தி கட்டுப்பாடுகளை தளர்த்த ஒபெக் கூட்டமைப்பு ஒப்புக்கொண்டதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சிறிது குறைந்தது போன்ற பல காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

மீண்டும் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.69 ஆயிரம் கோடி லாபம்..

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இன்போசிஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா, இண்டஸ்இந்த் வங்கி, நெஸ்லே இந்தியா, எச்.சி.எல். டெக்னாலஜிஸ் மற்றும் கோடக்மகிந்திரா வங்கி உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம், டெக் மகிந்திரா, ஐ.டி.சி., என்.டி.பி.சி., பவர் கிரீட், டைட்டன், ஓ.என்.ஜி.சி. மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மீண்டும் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.69 ஆயிரம் கோடி லாபம்..

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,078 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,528 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 164 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.142.80 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.69 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

மீண்டும் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.69 ஆயிரம் கோடி லாபம்..

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 419.87 புள்ளிகள் உயர்ந்து 36,471.68 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 121.75 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10.739.95 புள்ளிகளில் முடிவுற்றது.