சென்செக்ஸ் 19 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நஷ்டம்..

 

சென்செக்ஸ் 19 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நஷ்டம்..

இந்த வாரத்தின் 3வது வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நிலையில்லாமல் இருந்தது. இன்று காலையில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நல்ல ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் படிப்படியாக சரிவு காண தொடங்கியது. இருப்பினும் இறுதியில் சிறிய ஏற்றத்துடன் பங்கு வர்த்தகம் முடிவடைந்தது.

சென்செக்ஸ் 19 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நஷ்டம்..

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இன்போசிஸ், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஆக்சிஸ் வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஐ.டி.சி. உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ், பார்தி ஏர்டெல், ஓ.என்.ஜி.சி., இண்டஸ்இந்த் வங்கி, ஸ்டேட் வங்கி மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 19 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நஷ்டம்..

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,094 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,529 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 156 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.142.11 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

சென்செக்ஸ் 19 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நஷ்டம்..

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 18.75 புள்ளிகள் உயர்ந்து 36,051.81 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 10.85 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,618.20 புள்ளிகளில் முடிவுற்றது.