சென்செக்ஸ் 99 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.43 ஆயிரம் கோடி லாபம்…

 

சென்செக்ஸ் 99 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.43 ஆயிரம் கோடி லாபம்…

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் பங்குகளை வாங்கி குவித்தது, மற்றும் சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்தது போன்ற பல காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் உயர்வு கண்டது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.12 லட்சம் கோடியை கடந்தது.

சென்செக்ஸ் 99 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.43 ஆயிரம் கோடி லாபம்…

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டெக் மகிந்திரா, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பஜாஜ் பைனான்ஸ், எச்.டி.எப்.சி. வங்கி, எச்.டி.எப்.சி. நிறுவனம், பவர் கிரீட் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 99 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.43 ஆயிரம் கோடி லாபம்…

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,119 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,579 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 178 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.144.38 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.43 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 99 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.43 ஆயிரம் கோடி லாபம்…
இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 99.36 புள்ளிகள் உயர்ந்து 36,693.69 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 34.65 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,802.70 புள்ளிகளில் முடிவுற்றது.