தடுமாறிய பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 143 புள்ளிகள் சரிவு.. முதலீட்டாளர்களுக்கு ரூ.42 ஆயிரம் கோடி இழப்பு..

 

தடுமாறிய பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 143 புள்ளிகள் சரிவு.. முதலீட்டாளர்களுக்கு ரூ.42 ஆயிரம் கோடி இழப்பு..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வர்த்தகத்தின் இடையே சறுக்கல் கண்டது, டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் வாகன விற்பனை 64 சதவீதம் சரிந்தது, முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற பல காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் இன்று வீழ்ச்சி கண்டது.

தடுமாறிய பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 143 புள்ளிகள் சரிவு.. முதலீட்டாளர்களுக்கு ரூ.42 ஆயிரம் கோடி இழப்பு..

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன்பார்மா, இந்துஸ்தான் யூனிலீவர், பார்தி ஏர்டெல் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, டைட்டன், எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

தடுமாறிய பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 143 புள்ளிகள் சரிவு.. முதலீட்டாளர்களுக்கு ரூ.42 ஆயிரம் கோடி இழப்பு..

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,003 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,664 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 166 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.143.95 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.42 ஆயிரம் கோடியை இழந்தனர்.

தடுமாறிய பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 143 புள்ளிகள் சரிவு.. முதலீட்டாளர்களுக்கு ரூ.42 ஆயிரம் கோடி இழப்பு..

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 143.36 புள்ளிகள் சரிந்து 36,594.33 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 45.40 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 10,768.05 புள்ளிகளில் முடிவுற்றது.