புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.46 ஆயிரம் கோடி லாபம்..

 

புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.46 ஆயிரம் கோடி லாபம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 182 புள்ளிகள் உயர்ந்தது.

பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் புதிய உச்சத்தை தொட்டன. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், அல்ட்ராடெக் சிமெண்ட், டி.சி.எஸ்., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் மற்றும் இன்போசிஸ் உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், சன்பார்மா, இண்டஸ்இந்த் வங்கி மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.46 ஆயிரம் கோடி லாபம்..
டி.சி.எஸ்.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,493 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,461 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 177 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.181.61 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.46 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.46 ஆயிரம் கோடி லாபம்..
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 181.54 புள்ளிகள் உயர்ந்து 45,608.51 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 37.20 புள்ளிகள் ஏற்றம் கண்டு 13,392.95 புள்ளிகளில் முடிவுற்றது.