4 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5.34 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 930 புள்ளிகள் உயர்ந்தது.

 

4 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5.34 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 930 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரமும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.5.34 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

கடந்த திங்கட்கிழமையன்று குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமையன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் இந்த வாரம் மொத்தம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெற்றது. கோவிட்-19 தடுப்பூசி தொடர்பான நேர்மறையான தகவல்கள், கடந்த நவம்பர் மாத வாகனங்கள் விற்பனை, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கி குவித்தது, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வு கூட்டத்தின் முடிவுகள் போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

4 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5.34 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 930 புள்ளிகள் உயர்ந்தது.
கோவிட்-19 தடுப்பூசி

கடந்த செவ்வாய்கிழமை முதல் இன்று வரையிலான 4 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.179.48 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 27) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.174.14 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.5.34 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

4 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5.34 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 930 புள்ளிகள் உயர்ந்தது.
பங்கு வர்த்தகம் ஏற்றம்

நம் நாட்டு பங்குச் சந்தைகளில் இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 929.83 புள்ளிகள் உயர்ந்து 45,079.55 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 289.60 புள்ளிகள் ஏற்றம் கண்டு 13,258.55 புள்ளிகளில் முடிவுற்றது.