சென்செக்ஸ் 15 புள்ளிகள் உயர்ந்தது… நிப்டி 20 புள்ளிகள் ஏற்றம்..

 

சென்செக்ஸ் 15 புள்ளிகள் உயர்ந்தது… நிப்டி 20 புள்ளிகள் ஏற்றம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சுமாராக இருந்தது. சென்செக்ஸ் 15 புள்ளிகள் உயர்ந்தது.

பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் நல்ல ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தகம் ஏறுவதும்,இறங்குவதுமாக இருந்தது. இறுதியில் பங்கு வர்த்தகம் சிறிய உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மாருதி சுசுகி, ஓ.என்.ஜி.சி. மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், எச்.டி.எப்.சி. வங்கி, டி.சி.எஸ். மற்றும் பஜாஜ் ஆட்டோ உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 15 புள்ளிகள் உயர்ந்தது… நிப்டி 20 புள்ளிகள் ஏற்றம்..
மாருதி கார் மாடல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,987 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 929 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 170 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.178.26 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.15 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 15 புள்ளிகள் உயர்ந்தது… நிப்டி 20 புள்ளிகள் ஏற்றம்..
பங்கு வர்த்தகம் ஏற்றம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 14.61 புள்ளிகள் உயர்ந்து 44,632.65 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 20.15 புள்ளிகள் ஏற்றம் கண்டு 13,133.90 புள்ளிகளில் முடிவுற்றது.