சர்வதேச நிலவரங்களால் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 380 புள்ளிகள் உயர்ந்தது.

 

சர்வதேச நிலவரங்களால் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 380 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.88 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இங்கிலாந்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தும் இடையே பிரெக்சிட் வர்ததக ஒப்பந்தம் நிறைவேறியது, அமெரிக்காவில் 2.3 லட்சம் கோடி டாலர் தொற்றுநோய் உதவி மற்றும் செலவின தொகுப்பு ஒப்பந்தத்தில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டது போன்ற சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ்பின்சர்வ், டாக்டர் ரெட்டீஸ், சன்பார்மா மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய 4 நிறுவன பங்குகளை தவிர மற்ற 26 நிறுவன பங்குகளின் விலையும் உயர்ந்தது.

சர்வதேச நிலவரங்களால் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 380 புள்ளிகள் உயர்ந்தது.
டி.சி.எஸ்.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,018 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,001 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 178 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.187.06 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.88 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சர்வதேச நிலவரங்களால் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 380 புள்ளிகள் உயர்ந்தது.
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 380.21 புள்ளிகள் உயர்ந்து 47,353.75 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 123.95 புள்ளிகள் ஏற்றம் கண்டு 13,873.20 புள்ளிகளில் முடிவுற்றது.