புதிய உயரத்தில் பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 70 புள்ளிகள் உயர்ந்தது…

 

புதிய உயரத்தில் பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 70 புள்ளிகள் உயர்ந்தது…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.16 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. சென்செக்ஸ் முதல் முறையாக 47 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. இருப்பினும் முதலீட்டாளர்கள் லாபம் கருதி பங்குகளை விற்பனை செய்ய தொடங்கியதால் பங்கு வர்த்தகத்தில் சரிவு ஏற்பட்டது. இருப்பினும் கடைசியில் பங்கு வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இன்போசிஸ் மற்றும் பஜாஜ் ஆட்டோ உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

புதிய உயரத்தில் பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 70 புள்ளிகள் உயர்ந்தது…
இன்போசிஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,280 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,704 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 166 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.185.36 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.16 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

புதிய உயரத்தில் பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 70 புள்ளிகள் உயர்ந்தது…
சென்செக்ஸ்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 70.35 புள்ளிகள் உயர்ந்து 46,960.69 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 19.85 புள்ளிகள் ஏற்றம் கண்டு 13,760.55 புள்ளிகளில் முடிவுற்றது.