ஆட்டம் காட்டிய பங்கு வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி லாபம்..

 

ஆட்டம் காட்டிய பங்கு வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி லாபம்..

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் முடிந்தது. சென்செக்ஸ் 10 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கியது. பின்னர் வர்த்தகத்தில் பெரும் சரிவு ஏற்பட்டது. இருப்பினும் பங்கு வர்த்தகம் திடீரென ஏற்றம் கண்டது. இறுதியில் சிறிய உயர்வுடன் பங்கு வர்த்தகம் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் பஜாஜ் பைனான்ஸ், எச்.டி.எப்.சி. மற்றும் டெக் மகிந்திரா உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் நெஸ்லே இந்தியா உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஆட்டம் காட்டிய பங்கு வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி லாபம்..
பஜாஜ் பைனான்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,554 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,418 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 170 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.183.60 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

ஆட்டம் காட்டிய பங்கு வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி லாபம்..
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 9.71 புள்ளிகள் உயர்ந்து 46,263.17 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 9.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 13,567.85 புள்ளிகளில் முடிவுற்றது.