5 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.28 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 1,019 புள்ளிகள் உயர்ந்தது..

 

5 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.28 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 1,019 புள்ளிகள் உயர்ந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரமும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. முதலீட்டாளர்களுக்கு ரூ.3.28 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் வியாழக்கிழமையை தவிர்த்து மற்ற தினங்களில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. கொரோனா வைரஸ் தடுப்பூசி உலகில் முதல் முதலாக இங்கிலாந்தில் பயன்பாட்டுக்கு வந்தது, கடந்த நவம்பரில் வாகன விற்பனை சிறப்பாக இருந்தது, முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டது போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்திய பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் புதிய உச்சத்தை தொட்டன.

5 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.28 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 1,019 புள்ளிகள் உயர்ந்தது..
கோவிட்-19 தடுப்பூசி

கடந்த திங்கட்கிழமை முதல் இன்று வரையிலான 5 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.182.76 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 4) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.179.48 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3.28 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

5 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.28 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 1,019 புள்ளிகள் உயர்ந்தது..
மும்பை பங்குச் சந்தை

நம் நாட்டு பங்குச் சந்தைகளில் இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,019.46 புள்ளிகள் உயர்ந்து 46,099.01 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 255.30 புள்ளிகள் ஏற்றம் கண்டு 13,513.85 புள்ளிகளில் முடிவுற்றது.