சென்செக்ஸ் 144 புள்ளிகள் வீழ்ச்சி…. நிப்டி 51 புள்ளிகள் குறைந்தது..

 

சென்செக்ஸ் 144 புள்ளிகள் வீழ்ச்சி…. நிப்டி 51 புள்ளிகள் குறைந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவை சந்தித்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.63 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. கடந்த சில தினங்களாக பங்குச் சந்தைகளின் தொடர் ஏற்றம் காரணமாக பல முன்னணி நிறுவன பங்குகளின் விலை உயர்ந்து இருந்தது. இதனையடுத்து முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர். இது போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் பின்னடைவை சந்தித்தது.

சென்செக்ஸ் 144 புள்ளிகள் வீழ்ச்சி…. நிப்டி 51 புள்ளிகள் குறைந்தது..
பார்தி ஏர்டெல்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், நெஸ்லே இந்தியா, ஐ.டி.சி., இந்துஸ்தான் யூனிலீவர், கோடக் மகிந்திரா வங்கி, எல் அண்டு டி மற்றும் டாடா ஸ்டீல் உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், அல்ட்ராடெக் சிமெண்ட், மகிந்திரா அண்டு மகிந்திரா, எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 144 புள்ளிகள் வீழ்ச்சி…. நிப்டி 51 புள்ளிகள் குறைந்தது..
எச்.டி.எப்.சி. வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,251 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,659 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 161 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.182.22 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.63 ஆயிரம் கோடியை இழந்தனர்.

சென்செக்ஸ் 144 புள்ளிகள் வீழ்ச்சி…. நிப்டி 51 புள்ளிகள் குறைந்தது..
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 143.62 புள்ளிகள் சரிந்து 45,959.88 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 50.80 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 13,478.30 புள்ளிகளில் முடிவுற்றது.