ஆட்டம் கண்ட பங்கு வர்த்தகம்… ஆனாலும் முதலீட்டாளர்கள் ஹேப்பி…

 

ஆட்டம் கண்ட பங்கு வர்த்தகம்… ஆனாலும் முதலீட்டாளர்கள் ஹேப்பி…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் காலையில் நல்ல ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால் பின்னர் வர்த்தகம் சரிவு காண தொடங்கியது. முதலீட்டாளர்கள் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டதால் வர்த்தகம் மந்த கதியில் இருந்தது. இருப்பினும் இறுதியில் பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகம் சிறிய ஏற்றத்துடன் முடிவடைந்தது. இதனால் பங்கு வர்த்தகம் தொடர்ந்து 2வது நாளாக ஏற்றத்துடன் முடிவடைந்தது.

ஆட்டம் கண்ட பங்கு வர்த்தகம்… ஆனாலும் முதலீட்டாளர்கள் ஹேப்பி…

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா ஸ்டீல், மாருதி சுசுகி, மகிந்திரா அண்டு மகிந்திரா, பார்தி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி, ஓ.என்.ஜி.சி. மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்பட மொத்தம் 19 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம், பவர்கிரிட, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் டெக் மகிந்திரா உள்பட மொத்தம் 11 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஆட்டம் கண்ட பங்கு வர்த்தகம்… ஆனாலும் முதலீட்டாளர்கள் ஹேப்பி…

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,621 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,012 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 161 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.148.72 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.50 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

ஆட்டம் கண்ட பங்கு வர்த்தகம்… ஆனாலும் முதலீட்டாளர்கள் ஹேப்பி…

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 24.58 புள்ளிகள் குறைந்து 37,663.33 புள்ளிகளில் நிலைகொண்டது. அதேசமயம் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 6.40 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,101.65 புள்ளிகளில் முடிவுற்றது