5 நாளிலும் காளையின் ஆதிக்கம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.77 லட்சம் கோடி லாபம்…

 

5 நாளிலும் காளையின் ஆதிக்கம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.77 லட்சம் கோடி லாபம்…

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

இந்த வாரம் பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த திங்கள் முதல் இன்று வரையிலான 5 நாட்களிலும் பங்கு வர்த்தகம் தொடர்ந்து ஏற்றம் கண்டது. கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பான நேர்மறையான தகவல்கள், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்தது, அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகத்தில் சாதகமான முன்னேற்றம், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சிறப்பாக இருந்தது.

5 நாளிலும் காளையின் ஆதிக்கம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.77 லட்சம் கோடி லாபம்…
கோவிட்-19 தடுப்பூசி

கடந்த திங்கள் முதல் இன்று வரையிலான 5 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.158.32 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 21ம் தேதி) மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.155.55 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.77 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

5 நாளிலும் காளையின் ஆதிக்கம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.77 லட்சம் கோடி லாபம்…
பங்கு வர்த்தகம் ஏற்றம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,032.59 புள்ளிகள் உயர்ந்து 39,467.31 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 276 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,647.60 புள்ளிகளில் முடிவுற்றது.