சென்செக்ஸ் 45 புள்ளிகள் உயர்ந்தது…. முதலீட்டாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி லாபம்

 

சென்செக்ஸ் 45 புள்ளிகள் உயர்ந்தது…. முதலீட்டாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் பெரிய அளவில் பங்கு வர்த்தகம் ஏற்றம் காணவில்லை. பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் நிலவியது. இறுதியில் பங்கு வர்த்தகம் லேசான உயர்வுடன் முடிவடைந்தது. இந்த வாரத்தில் தொடர்ந்து 2வது நாளாக இன்று பங்கு வர்த்தகம் உயர்வை சந்தித்தது.

சென்செக்ஸ் 45 புள்ளிகள் உயர்ந்தது…. முதலீட்டாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி லாபம்
பாரத ஸ்டேட் வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் பைனான்ஸ், பாரத ஸ்டேட் வங்கி, டெக் மகிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், என்.டி.பி.சி., சன்பார்மா மற்றும் நெஸ்லே இந்தியா உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 45 புள்ளிகள் உயர்ந்தது…. முதலீட்டாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி லாபம்
என்.டி.பி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,352 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,472 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 153 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.156.88 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.30 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 45 புள்ளிகள் உயர்ந்தது…. முதலீட்டாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி லாபம்
தேசிய பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 44.80 புள்ளிகள் உயர்ந்து 38,843.88 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 5.80 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,472.25 புள்ளிகளில் முடிவுற்றது.