சென்செக்ஸ் 364 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.03 லட்சம் கோடி லாபம்..

 

சென்செக்ஸ் 364 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.03 லட்சம் கோடி லாபம்..

இந்தவாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்தது, வங்கி துறையை சேர்ந்த பல பங்குகளின் விலை உயர்ந்தது போன்ற பல காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது.

சென்செக்ஸ் 364 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.03 லட்சம் கோடி லாபம்..
கோடக் மகிந்திரா வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், கோடக்மகிந்திரா வங்கி, பஜாஜ் பைனான்ஸ், இண்டஸ்இந்த் வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பவர்கிரிட், டெக்மகிந்திரா, மகிந்திரா அண்டு மகிந்திரா, டைட்டன், நெஸ்லே இந்தியா, பஜாஜ்-ஆட்டோ உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 364 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.03 லட்சம் கோடி லாபம்..
பவர் கிரிட்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,668 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,195 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 171 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.156.59 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.03 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 364 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.03 லட்சம் கோடி லாபம்..
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 364.36 புள்ளிகள் உயர்ந்து 38,799.08 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 94.85 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,466.45 புள்ளிகளில் முடிவுற்றது.