முதலீட்டாளர்களை கதி கலங்க வைத்த பங்கு வர்த்தகம்… ரூ.43 ஆயிரம் கோடி நஷ்டம்

 

முதலீட்டாளர்களை கதி கலங்க வைத்த பங்கு வர்த்தகம்… ரூ.43 ஆயிரம் கோடி நஷ்டம்

சீனா, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட ஆசிய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் மந்த கதியில் இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிந்தது, பல நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இல்லை மற்றும் முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்று தள்ளியது போன்ற காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது.

முதலீட்டாளர்களை கதி கலங்க வைத்த பங்கு வர்த்தகம்… ரூ.43 ஆயிரம் கோடி நஷ்டம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், என்.டி.பி.சி., ஓ.என்.ஜி.சி., பவர் கிரிட், டாடா ஸ்டீல் மற்றும் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் ஆகிய 5 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், எச்.டி.எப்.சி., ஆக்சிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், மகிந்திரா அண்டு மகிந்திரா, டைட்டன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்பட மொத்தம் 25 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

முதலீட்டாளர்களை கதி கலங்க வைத்த பங்கு வர்த்தகம்… ரூ.43 ஆயிரம் கோடி நஷ்டம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,595 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,169 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 169 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.154.48 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.43 ஆயிரம் கோடியை இழந்தனர்.

முதலீட்டாளர்களை கதி கலங்க வைத்த பங்கு வர்த்தகம்… ரூ.43 ஆயிரம் கோடி நஷ்டம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 394.40 புள்ளிகள் சரிந்து 38,220.39 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 96.20 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,312.20 புள்ளிகளில் முடிவுற்றது.