வரும் வாரத்தில் ரிசர்வ் வங்கி கூட்டம் உள்ளிட்ட முக்கிய நிலவரங்களை கவனியுங்க.. பங்கு சந்தை நிபுணர்கள் கணிப்பு

 

வரும் வாரத்தில் ரிசர்வ் வங்கி கூட்டம் உள்ளிட்ட முக்கிய நிலவரங்களை கவனியுங்க.. பங்கு சந்தை நிபுணர்கள் கணிப்பு

டி.எல்.எப்., டாடா ஸ்டீல், லுப்பின், டைட்டன்,கனரா வங்கி, அதானி பவர் மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட பல முன்னணி நிறுவனங்கள் இந்த வாரம் தங்களது காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட உள்ளன. கடந்த ஜூலை மாதத்தில் வாகன விற்பனை முந்தைய மே, ஜூன் மாதங்களை காட்டிலும் நன்றாக இருந்தது. இரு மாதங்களுக்கு ஒரு முறை 3 நாட்கள் நடக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் நாளை மறுநாள் தொடங்குகிறது. வரும் 6ம் தேதியன்று ரிசர்வ் வங்கி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிவிக்க உள்ளது.

வரும் வாரத்தில் ரிசர்வ் வங்கி கூட்டம் உள்ளிட்ட முக்கிய நிலவரங்களை கவனியுங்க.. பங்கு சந்தை நிபுணர்கள் கணிப்பு

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் நம் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.80 கோடியை தாண்டி விட்டது. மேலும் சுமார் 7 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அமெரிக்கா-சீனா இடையிலான மோதல், ஜப்பான், சீனா, ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த வாரம் முக்கிய பொருளாதார புள்ளி விவரங்கள் வெளிவருகிறது.

வரும் வாரத்தில் ரிசர்வ் வங்கி கூட்டம் உள்ளிட்ட முக்கிய நிலவரங்களை கவனியுங்க.. பங்கு சந்தை நிபுணர்கள் கணிப்பு

இதுதவிர, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆகையால் மேற்கண்ட காரணிகளை பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.