தொடர் ஏற்றத்தில் பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.77 ஆயிரம் கோடி லாபம்…

 

தொடர் ஏற்றத்தில் பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.77 ஆயிரம் கோடி லாபம்…

தொடர்ந்து 3வது நாளாக இன்றும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. இன்று காலையில் பங்கு வர்த்தகம் நல்ல ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் சிறிது நேரத்துக்கு பிறகு பங்கு வர்த்தகத்தில் ஏற்றம் இறக்கம் நிலவியது. முதலீட்டாளர்கள் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டதை இதற்கு காரணம். கடைசியில் பங்கு வர்த்தகம் சிறிய உயர்வுடன் முடிவடைந்தது.

தொடர் ஏற்றத்தில் பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.77 ஆயிரம் கோடி லாபம்…

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டெக் மகிந்திரா, பார்தி ஏர்டெல், மாருதி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் அல்ட்ராடெக்சிமெண்ட் உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. ஓ.என்.ஜி.சி., பஜாஜ் ஆட்டோ, நெஸ்லே இந்தியா, டாடா ஸ்டீல் மற்றும் கோடக்மகிந்திரா வங்கி உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

தொடர் ஏற்றத்தில் பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.77 ஆயிரம் கோடி லாபம்…

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,791 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 998 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 165 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.154.91 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.77 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

தொடர் ஏற்றத்தில் பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.77 ஆயிரம் கோடி லாபம்…

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 86.47 புள்ளிகள் உயர்ந்து 38,614.79 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 23.05 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,408.40 புள்ளிகளில் முடிவுற்றது.