தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்… ஆனால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 74 ஆயிரம் கோடி லாபம்

 

தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்… ஆனால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 74 ஆயிரம் கோடி லாபம்

இன்று காலையில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் ஏற்றம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சில மணி நேரத்தில் பிறகு பங்கு வர்த்தகம் சரிவு காண தொடங்கியது. கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், கெயில் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இல்லாதது, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற பல்வேறு காரணங்களால் தொடர்ந்து 2வது நாளாக இன்று பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது.

தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்… ஆனால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 74 ஆயிரம் கோடி லாபம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எல் அண்டு டி, டைட்டன், என்.டி.பி.சி., அல்ட்ராடெக்சிமெண்ட், டெக் மகிந்திரா, ஓ.என்.ஜி.சி. மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், சன்பார்மா, பார்தி ஏர்டெல், ஐ.டி.சி., ஸ்டேட் வங்கி, பவர் கிரிட் மற்றும் நெஸ்லே இந்தியா உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்… ஆனால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 74 ஆயிரம் கோடி லாபம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,580 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,151 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 143 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.152.93 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.74 ஆயிரம் கோடி லாபம் பார்த்தனர்.

தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்… ஆனால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 74 ஆயிரம் கோடி லாபம்
இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 59.14 புள்ளிகள் சரிந்து 38,310.49 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 7.95 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,300.45 புள்ளிகளில் முடிவுற்றது.