சென்செக்ஸ் 37 புள்ளிகள் குறைந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.13 ஆயிரம் கோடி நஷ்டம்..

 

சென்செக்ஸ் 37 புள்ளிகள் குறைந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.13 ஆயிரம் கோடி நஷ்டம்..

கடந்த சில தினங்களாக ஏற்றம் கண்டு வந்த பங்கு வர்த்தகம் இன்று சரிவை சந்தித்தது. இன்று காலையில் பங்கு வர்த்தகம் இறக்கத்துடனே தொடங்கியது. பின் நேற்றைய முடிவை காட்டிலும் சில புள்ளிகள் ஏறிய சென்செக்ஸ் மறுபடியும் சரிந்தது. இறுதியில் நேற்று பங்கு வர்த்தகம் சிறிய சரிவுடன் முடிவடைந்தது. பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்தது.

சென்செக்ஸ் 37 புள்ளிகள் குறைந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.13 ஆயிரம் கோடி நஷ்டம்..
சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஸ்டேட் வங்கி, டெக் மகிந்திரா, மாருதி, பவர் கிரிட், பஜாஜ் ஆட்டோ, மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், கோடக்மகிந்திரா வங்கி, சன்பார்மா, எல் அண்டு டி மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது.

சென்செக்ஸ் 37 புள்ளிகள் குறைந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.13 ஆயிரம் கோடி நஷ்டம்..

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,508 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,214 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 148 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.152.19 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடியை இழந்தனர்.

சென்செக்ஸ் 37 புள்ளிகள் குறைந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.13 ஆயிரம் கோடி நஷ்டம்..

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 37.38 புள்ளிகள் சரிந்து 38,369.63 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 14.10 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,308.40 புள்ளிகளில் முடிவுற்றது.