தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 225 புள்ளிகள் உயர்ந்தது..

 

தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 225 புள்ளிகள் உயர்ந்தது..

இந்த வாரத்தில் தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. இன்று காலையில் வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது. பின் சிறிது சரிவு கண்ட பிறகு மீண்டும் ஏற்றம் கண்டது. பல முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இல்லாதது போன்ற பல காரணங்களால் பங்கு வர்த்தகம் பெரிய அளவில் ஏற்றம் காண முடியவில்லை.

தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 225 புள்ளிகள் உயர்ந்தது..

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஆக்சிஸ் வங்கி, ஐ.டி.சி., இண்டஸ்இந்த் வங்கி, எச்.டி.எப்.சி. நிறுவனம், டாடா ஸ்டீல் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்பட மொத்தம் 20 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டைட்டன், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், பார்தி ஏர்டெல், ஓ.என்.ஜி.சி., சன்பார்மா மற்றும் பவர் கிரிட் உள்பட மொத்தம் 10 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 225 புள்ளிகள் உயர்ந்தது..

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,598 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,161 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 160 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.152.24 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.22 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 225 புள்ளிகள் உயர்ந்தது..

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 224.93 புள்ளிகள் உயர்ந்து 38,407.01 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 52.35 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,322.50 புள்ளிகளில் முடிவுற்றது.