ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.07 லட்சம் கோடி லாபம்..

 

ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.07 லட்சம் கோடி லாபம்..

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று காலையில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. 101 ராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் தடைவிதித்துள்ளது. இதனால் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகளுக்கு நல்ல தேவை இருந்தது. சிப்லா உள்பட சில முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது போன்ற பல்வேறு காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.07 லட்சம் கோடி லாபம்..

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மகிந்திரா அண்டு மகிந்திரா, எல் அண்டு டி, சன் பார்மா, என்.டி.பி.சி., டெக் மகிந்திரா உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஏசியன் பெயிண்ட்ஸ், மாருதி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.07 லட்சம் கோடி லாபம்..

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,763 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 995 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 173 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.152.02 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.07 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.07 லட்சம் கோடி லாபம்..

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 141.51 புள்ளிகள் உயர்ந்து 38,182.08 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 56.10 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,270.15 புள்ளிகளில் முடிவுற்றது.