வைரலாகும் ஈபிஎஸ் – ராகுல் போட்டோக்கள்!

 

வைரலாகும் ஈபிஎஸ் – ராகுல் போட்டோக்கள்!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 14ம் தேதி அன்று சேலம் மாவட்டத்தில் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சப்பாணிப்பட்டி அருந்ததியர் காலணியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றார்.

வைரலாகும் ஈபிஎஸ் – ராகுல் போட்டோக்கள்!

சப்பாணிப்பட்டி கிராமத்து ஆண்களும், பெண்களும் திரண்டு வந்து முதல்வருக்கு உற்சாக வரவேற்பினை அளித்தார்கள். அந்த ஊரில் உள்ள விநாயகர் கோவில், மாரியம்மன் கோவிலில் அப்பகுதி மக்களோடு மக்களாக சாமி தரிசனம் செய்தார் முதல்வர்.

வைரலாகும் ஈபிஎஸ் – ராகுல் போட்டோக்கள்!

ஊர் மக்கள் அனைவரும் தைப்பொங்கலையொட்டி பொங்கல் வைத்து வழிப்பட்ட நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் கலந்து கொண்டு அப்பகுதி மக்களை மகிழ்வித்தார். அப்போது முதல்வருடன் செல்பி எடுக்க வேண்டுமென பெண்கள் கேட்டுக்கொண்டத்திற்கிணங்க முதல்வரும் செல்பி எடுத்துக்கொண்டார்.

பொங்கல் வைத்ததும், மாரியம்மன் கோவில் வளாகத்தில் பரிமாறப்பட்டது. அருந்ததியர் சமுதாயப் பெருமக்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார் முதல்வர்.

வைரலாகும் ஈபிஎஸ் – ராகுல் போட்டோக்கள்!

முதல்வர் அந்தப்பகுதிக்கு வருகைதந்தது மட்டுமல்லாமல், பொங்கல் விழாவிலும் கலந்துக்கொண்டு தங்களோடு அமர்ந்து உணவு சாப்பிட்டது தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக கருதுகின்றனர் அப்பகுதி மக்கள்.

வைரலாகும் ஈபிஎஸ் – ராகுல் போட்டோக்கள்!

மக்களுடன் அமர்ந்து சாப்பிடும் முதல்வரின் போட்டோ இணையங்களில் வைரலாகி வருகிறது. அதே போல், பொங்கல் தினத்தில் மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை கண்டு ரசித்தார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர். பின்னர் இலைபோட்டு பொங்கல் பரிமாறப்பட்டது. மக்களுடன் அமர்ந்து ராகுல்காந்தியும் உணவு சாப்பிட்டார். இந்த போட்டோவும் இணையங்களில் வைரலாகி வருகிறது.