2019ம் ஆண்டின் ரிஷப ராசி புத்தாண்டு பலன்கள்!

 

2019ம் ஆண்டின் ரிஷப ராசி புத்தாண்டு பலன்கள்!

ரிஷப ராசிக்கு ஜோதிட அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

ரிஷபம் :

கவர்ச்சிகாரகன் என்று அழைக்கப்படும் சுக்கிரனை ராசி அதிபதியாக கொண்ட ரிஷப ராசி நேயர்களே. நீங்கள் கொடுத்த வாக்கினை உயிருக்கு சமமாக நினைப்பவர்கள். உங்களுக்கு அஷ்டமத்து சனி நடைபெறுகிறது என்று எந்த வித பயமும் உங்களுக்கு தேவை இல்லை. 

risabam

ஜனவரி மாதம் இரண்டாம் தேதி முதல் உங்களது ராசி நாதன் சுக்கிரனும், ராஜ கிரகமான குருவும் உங்களது ராசியை ஏழாவது பார்வையாக பார்த்து அருள் செய்வதால் உங்களது முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றி பெரும்.

ரிஷப ராசிக்கு மிகவும் பொன்னான காலகட்டம் இதுவாகும் .உங்களது வீட்டில் சுப காரிய பேச்சு வார்த்தைகள் முடிவாகும். உங்களது வீட்டில் சுப காரியங்கள் கண்டிப்பாக நடைபெறும்.

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு கண்டிப்பாக குழந்தை பாக்கியம் உண்டாகும் . தொழிலில் தன்நிறைவு அடைவீர்கள். வெளிநாடுகளில் வேலை செய்யும் வாய்ப்புகள் மற்றும் வெளிநாடு சென்று வரும் பாக்கியம் உண்டாகும்.

risahbam

புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு இந்த வருடம் அற்புதமான பலன்களை தரக்கூடிய ஆண்டாக அமையும். வருகின்ற குரு பெயர்ச்சிக்கு பின்னர் வீடு மனை வாங்கும் யோகமும் புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும்.

வழக்குகளில் வெற்றி கிடைக்கும். காதலில் நூறுசதவிகிதம் வெற்றி கிடைக்கும். கடன் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படும். எந்த ஒரு வேலையை முடிப்பதற்கும் உடல் உழைப்பு அதிகமாக தேவைப்படும்.  

ரிஷப லக்ன பலன்கள்  : வண்டி வாகனங்களை கவனமாக  பயன்படுத்துவது நன்மை பயக்கும் .

கிருத்திகை நட்சத்திரம் :  வாழ்க்கை தேவைகள் நிறைவேறும்.

rishabam

ரோகினி நட்சத்திரம் : புதிய புதிய வாய்ப்புகள் உருவாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரம் : சகோதர சகோதரிகளிடத்தில் இணக்கம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள் : 2,3,6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள்.

பரிகாரம் : தமிழ் மாதம் கடைசி வெள்ளிகிழமை மற்றும் பௌர்ணமி தினத்தில் அன்னதானம் வழங்குவது மிகச்சிறந்த பரிகாரமாக அமையும்.