2019ம் ஆண்டின் மீன ராசி புத்தாண்டு பலன்கள்!
மீன ராசிக்கு ஜோதிட அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.
மீனம் :
தேவ குருவை ராசிநாதனாக கொண்ட மீன ராசி நேயர்களே. அடுத்தவர்களுக்கு உதவுவதற்காகவே தன்னை அற்பனித்துகொள்ளும் நல்ல மனம் படைத்தவர்கள் நீங்கள். தன்னை பற்றி மட்டும் சிந்திக்காது மற்றவர்களை பற்றியும் சிந்திக்கும் மிகவும் உன்னதமான குணம் படைத்தவர்கள் நீங்கள்.
இத்தகைய நல்ல மனம் படைத்த உங்களுக்கு 2019 ஆம் ஆண்டு மிக சிறந்த நல்ல பலன்களை கொடுக்க கூடிய ஆண்டாக அமையும். கடந்த ஏழு வருடங்களாக நீங்கள் பட்டுவந்த மன வேதனைகள் குறைந்து உங்களது குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் காலகட்டம் இதுவாகும்.
இந்த வருடம் உங்களது வாழ்வில் பொன் எழுத்துகளால் பொறிக்க கூடிய வருடமாக அமையும். கடந்த கால அனுபவங்கள் உங்களுக்கு கைகொடுக்கும் விலகி சென்ற உறவுகள் எல்லாம் உங்களை தேடி வருகின்ற காலகட்டம் இதுவாகும்.
மனதில் இருந்து வந்த பயம் மற்றும் குழப்பங்கள் நீங்கும். உங்கள் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பாக்கியங்களும் உங்களை தேடி வந்து சேரும். புதிதாக வீடு, மனை மற்றும் வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உங்களுக்கு உண்டாகும்.
திருமணம் ஆகாத இளம் வயதினருக்கு திருமணம் கண்டிப்பாக நடைபெறும்.காதல் திருமணம் கை கூடும். வாழ்க்கை துணையுடன் ஏற்பட்டு வந்த மோதல்கள் நீங்கும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு கண்டிப்பாக குழந்தை பாக்கியம் உண்டாகும்.
புதிய தொழில் துவங்குவதற்கு சரியான காலகட்டம் இதுவாகும். தொழிலில் ஏற்பட்டு வந்த தடை தாமதங்கள் நீங்கும். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் நினைத் காரியம் நினைத்த நேரத்தில் நடை பெறும். கடன் சுமை நீங்கும்.
தொட்ட தெல்லாம் துலங்க கூடிய காலகட்டம். காதலில் வெற்றி கிட்டும். மொத்தத்தில் ராஜ யோகமான கால கட்டமாக இந்த 2019 ஆம் ஆண்டு அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மீன லக்ன பலன்கள் : எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.
பூரட்டாதி நட்சத்திரம் : பூமி வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
உத்திரட்டாதி நட்சத்திரம் : புதிய தொழில் தொடங்குவீர்கள்.
ரேவதி நட்சத்திரம் : தடை, தாமதங்கள் நீங்கும்.
அதிர்ஷ்ட எண்கள் : 1,3,6,9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிகப்பு.
பரிகாரம் : திருமணம் நடைபெற உள்ள ஏழை பெண்ணிற்கு தாலிக்கு தங்கம் வாங்கி கொடுப்பதும். யானைகளுக்கு உணவு அளிப்பதும் மிகுந்த நன்மை தரக்கூடிய பரிகாரமாக அமையும். மீன்களுக்கு உணவு அளிப்பதும் மேன்மையான பலன்களை கொடுக்கும்.