2019ம் ஆண்டின் கன்னி ராசி புத்தாண்டு பலன்கள் 

 

2019ம் ஆண்டின் கன்னி ராசி புத்தாண்டு பலன்கள் 

கன்னி ராசிக்கு ஜோதிட அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

கன்னி : 

வித்யாகாரகன் புதனை ராசி நாதனாக கொண்ட கன்னி ராசி அன்பர்களே . நீங்கள் உழைப்பதற்கு தயங்காதவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிலையாக இருந்து உங்களது செயல்களை முடிப்பீர்கள் . 12 ராசிக்காரர்களில் சேமிக்கும் பழக்கம் உடையவர்கள் நீங்களாகத்தான் இருப்பீர்கள் . 

kanni

அடுத்தவர்களுக்கு அறிவுரை வழங்குவதில் உங்களுக்கு நிகர் யாரும் இல்லை என்று சொல்ல கூடிய வகையில் அடுத்தவர்களின் பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு காண்பீர்கள்.

உங்களது பேச்சுத்திறனால் அனைவரையும் கவர்ந்து இழுப்பீர்கள். 2019 ஆம் ஆண்டு குடும்பம் சார்ந்த விசயங்களில் கவனமாக இருப்பதும் அடுத்தவர்களின் கருத்திற்கு மதிப்பு கொடுப்பதும் மிகவும் மேன்மையான பலன்களை கொடுக்கும். 

வார்த்தைகளில் கவனம் தேவை பொருளாதார மேம்பாடு உண்டாகும். புதிய முதலிடுகளில் கவனமாக இருப்பது நல்லது. கூட்டு தொழிலில் யாருக்கும் ஜாமீன் கொடுக்காதீர்கள். கடுமையான பணிச்சுமை உண்டாகும். வண்டி வாகனங்கள் பயன்படுத்தும் பொழுது கவனம் தேவை .

kanni

உடல்நிலையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் . மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டும் மருந்துகளை எடுத்து கொள்ளவும் நீங்களாக எந்த மருந்துகளையும் எடுத்துகொள்ள வேண்டாம். உணவு பழக்க வழக்கங்களில் கவனமாக இருக்கவும் .

வண்டி வாகனங்களில் கவனமாக இருப்பது நன்மை தரும். பூமி சம்ந்தப்பட்ட விசயங்களில் மிக மிக கவனம் தேவை . திருமணம் சார்ந்த பேச்சுவார்த்தைகளை  நிதானமாக கையாள்வது நன்மை பயக்கும். காதல் திருமணத்தில் தடைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

கன்னியா லக்ன பலன்கள் : வேலை மாற்றம் மற்றும் இட மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

உத்திரம் நட்சத்திரம் : உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .

kanni rasi

ஹஸ்தம் நட்சத்திரம் : எந்த ஒரு செயலிலும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல் படுவது நன்மை பயக்கும்.

சித்திரை நட்சத்திரம் : கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் உருவாகலாம் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான எண்கள் : 2,5,6

அதிர்ஷ்டமான நிறம் : பச்சை மற்றும் வெள்ளை 

பரிகாரம் : தாய் மாமன் மற்றும் மைத்துனர்களிடத்தில் விட்டு கொடுத்து நடந்து கொள்வதும் பத்திரிக்கையாளர்களிடத்தில் தேவை அற்ற வாக்கு வாதத்தினை தவிர்ப்பதும் மிகுந்த நன்மை பயக்கும்.

தாய் வழி உறவுகளுக்கு உங்களால் முடிந்த உதவிகள் செய்வதும் அருகில் இருக்கும் ஆலயங்களுக்கு விளக்கு ஏற்றுவதற்கு எண்ணெய் வாங்கி கொடுப்பதும்  மிக சிறந்த பரிகாரமாக அமையும்.