2019ன் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்?

 

2019ன் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்?

ஜோதிட அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு எந்தெந்த ராசிக்கு மிகப்பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகளை உருவாக்கும் என்பதினை பற்றி விரிவாக பார்போம்.

2019 ஆம் ஆண்டு நல்ல பலன்களை பெறக்கூடிய ராசிகளாக நான்கு ராசிகள் அமைந்துள்ளது. அந்தவகையில் ரிஷபம், கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய நான்கு ராசிக்காரர்களுக்கு வருகின்ற 2019 ஆம் ஆண்டு ராஜயோகத்தினை தரக்கூடிய ஆண்டாக அமையும் வாய்ப்புகள் உள்ளது.

new year

 

ரிஷபம் :

rishabam

அந்த வகையில் முதலாவதாக வருகின்ற ராசி ரிஷப ராசியாகும் இந்த ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனியினால் பாதிப்புகள் ஏற்படும் என்ற அச்சம் ஏதும் நீங்கள் கொள்ள தேவை இல்லை மற்ற கிரகங்களின் சஞ்சாரம் மிக மிக அற்புதமான பலன்களை கொடுக்கும்.

பொதுவாகவே தாயாரின் மீது அதீத பாசம் வைத்துள்ள நீங்கள் வருகின்ற காலங்களிலும் அவர்களுக்கு தேவையான பணிவிடைகள் செய்வதன் மூலம் மிக நல்ல பலன்களை நீங்கள் பெறமுடியும். 

new year

கொடுத்த வாக்கினை காப்பற்ற முடியும் சுப நிகழ்ச்சிகளில் ஏற்பட்டு வந்த தடை, தாமதங்கள் நீங்கும். அருகிலுள்ள பெருமாள் ஆலயங்களுக்கு நீங்கள் சென்று வருவது உங்களது வாழ்க்கை தேவைகளை உடனே கிடைக்க பெறக்கூடிய பரிகாரமாக அமையும்.

கடகம் :

kadakam

அடுத்ததாக நாம் பார்க்க இருக்கின்ற ராசி கடக ராசியாகும் இந்த ராசிக்காரர்களுக்கு இரண்டு முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டில் நடைபெற உள்ளது

அதில் ஓன்று உங்கள் ராசிக்கு குரு பார்வை கிடைக்கப்பெறுவது மற்றொன்று உங்கள் ராசியில் உள்ள ராகு பகவான் உங்கள் ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு 12 ஆம் இடமாகிய மிதுன ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் கண்டிப்பாக உங்களுக்கு மிக மிக நல்ல பலன்கள் நடைபெற உள்ளது.

வீடு, மனை,வண்டி,வாகனம் வாங்க கூடிய காலகட்டமாக இந்த ஆண்டு கண்டிப்பாக அமையும். நீண்டநாட்களாக இருந்து வந்த காரிய தடைகள் விலகும். உங்களது சேமிக்கும் திறன் மேலோங்கும் நேரம் இதுவாகும். வெளிநாடுகளிலில் பணிபுரியும் வாய்ப்புகள் உங்களுக்கு உருவாகும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்கள் நடத்துபவர்களுக்கு மிகுந்த லாபம் கிடைக்கும். 

new year

பெண்களுக்கு மரியாதை கொடுப்பதும் அருகில் இருக்க கூடிய அம்மன் ஆலயங்களுக்கு பௌர்ணமி தினத்தில் சென்று வழிபாடு செய்வதும் மிக சிறந்த பரிகாரமாக அமையும்.

விருச்சிகம் : 

viruchigam

மூன்றாவதாக நாம் பார்க்க இருக்கின்ற ராசி விருச்சிக ராசியாகும் இந்த ராசிக்கு இரண்டு மற்றும் ஐந்துக்கு உடையவர்களாகிய குருபகவான் உங்கள் ராசியிலேயே சஞ்சாரம் செய்வதால் மிக மிக மேன்மையான பலன்களை நீங்கள் பெறப்போகின்றீர்கள்.

இதுவரை உங்களது ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த ராகு பகவான் இந்த ஆண்டில் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சஞ்சாரம் செய்ய போவதால் மனதில் இருந்துவந்த பதட்டம் நீங்கும். மேலும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை மேலோங்கும். 

இந்த ஆண்டு உங்களது ராசி நாதனும் குருவும் பரிவர்த்தனை பெறுவதால் உங்களது ராசிக்கு மிக சிறந்த பலன்களை தரப்போகிறது.புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்டுவந்த தடை தாமதங்கள் நீங்கும்.

new year

புதிய சொத்துகள் வாங்குவதற்கும் புதிதாக தங்கம் வாங்குவதற்கும் கிரக சூழ்நிலைகள் அமைந்துள்ளது. அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது மிகுந்த மேன்மையான பலன்களை கொடுக்கும். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வருவதன் மூலம் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி கிடைக்கும்.

 

மீனம் :

meenam

நான்காவதாக நாம் பார்க்க இருக்கின்ற ராசி மீன ராசி ஆகும். இந்த ராசிக்கு 2012க்கு பிறகு இந்தாண்டு பொற்கால ஆண்டாக அமையும். பல்வேறு பிரச்சனைகளிலும் இன்னல்களிலும் இருந்து வந்த உங்களுக்கு இந்த 2019 ஆண்டு மிக பெரிய வெற்றி வாய்ப்புகளை கொடுக்க கூடிய ஆண்டாக அமையும்.

பணம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும். பொருளாதரத்தில் தன்னிறைவு அடைவீர்கள். அனைத்து கிரகங்களில் சஞ்சாரமும் உங்களுக்கு அனுகூலங்களை தரக்கூடியதாக அமைந்துள்ளது.

சுப நிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடை தாமதங்கள் நீங்கும். முடிந்த வரை உங்களை விட வயதில் பெரியவர்களிடத்தில் மிகுந்த பணிவுடன் நடந்து கொள்வதும்.
யாரை நீங்கள் குருவாக நினைத்து வாழிபாடு செய்து வருகின்றீர்களோ அவர்களிடத்தில் கனிவாக நடந்து கொள்வதும் உங்கள் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களிலும் உங்களை தன்னிறைவு அடைய செய்யும்.

new year

அருகில் உள்ள சிவன் ஆலயங்களுக்கு சென்று வருவதும் நவகிரகங்களில் வீற்று இருக்க கூடிய குருவினை வழிபாடு செய்வதும் மேலும் பிரம்மாவை வழிபாடு செய்வதும் உங்களுக்கு சிறந்த பரிகாரமாக அமையும்.