இயக்குநர் சுசீந்திரனின் தாயார் மரணம்: ஈஸ்வரன் படக்குழு இரங்கல்

 

இயக்குநர் சுசீந்திரனின் தாயார் மரணம்: ஈஸ்வரன் படக்குழு இரங்கல்

திரைப்பட இயக்குநர் சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி நேற்று காலை 11 மணி அளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இறுதிச்சடங்குகள் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது.

இயக்குநர் சுசீந்திரனின் தாயார் மரணம்: ஈஸ்வரன் படக்குழு இரங்கல்

இயக்குநர் எஸ்.எழிலிடம் உதவி இயக்குநராக இருந்த சுசீந்திரன், ‘வெண்ணிலா கபடிகுழு’ மூலம் இயக்குநர் ஆனார். முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்த சுசீந்திரன், அடுத்து கார்த்திக்கை வைத்து ’நான் மகான் அல்ல’ படத்தின் மூலம் பிரபலமானார்.

அழகர்சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, பாண்டியநாடு, கென்னடி கிளப், ராஜபாட்டை, நெஞ்சில் துணிவிருந்தால், சாம்பியன் என தொடர்ந்து படங்களை இயக்கியுள்ளவர், தற்போது சிம்புவை வைத்து இவர் இயக்கியிருக்கும் ஈஸ்வரன் படம் பொங்கலுக்கு திரைக்கு வந்திருக்கிறது.

இயக்குநர் சுசீந்திரனின் தாயார் மரணம்: ஈஸ்வரன் படக்குழு இரங்கல்

ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெறும் இத்தருணத்தில் தாயை இழந்து நிற்கும் எங்கள் இயக்குனர் சுசீந்திரன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் என்று ஈஸ்வரன் பட நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.