உள்ளாடைக்கு ஆசைப்பட்டு உடலையே காட்டவேண்டிய கதிக்கு ஆளான பெண்!

 

உள்ளாடைக்கு ஆசைப்பட்டு உடலையே காட்டவேண்டிய கதிக்கு ஆளான பெண்!

ப்ரீயா கொடுத்தா பினாயிலை கூட குடிப்பான் என்று சொல்வதற்கு தகுந்தமாதிரிதான் மக்கள் இலவச மோகத்திற்கு அடிமையாகிவிட்டார்கள். இப்படிப்பட்ட இலவச பிரியர்களை குறிவைத்து நேர்மையாக சம்பாதிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதேநேரத்தில் எதிர்மறையான ஆசாமிகளும் இல்லாமல் இல்லை.

உள்ளாடைக்கு ஆசைப்பட்டு உடலையே காட்டவேண்டிய கதிக்கு ஆளான பெண்!

இலவச மோகத்தினால் உள்ளாடைக்கு ஆசைப்பட்டு உடலையே காட்ட வேண்டிய கதிக்கு ஆளாகி இருக்கிறார் ஒரு பெண்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரைச் சேர்ந்த அப்பெண்ணுக்கு கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி அன்று சொல்போனுக்கு மெசேஜ் வந்திருக்கிறது.

ஒரு நிறுவனத்தின் பெயரைக்குறிப்பிட்டு, அந்த நிறுவனத்தின் பொருட்களை ஆன்லைன் மூலமாக வாங்கி இருந்தால், ‘இலவச உள்ளாடைகள்’வழங்கப்படும் என்றும், தங்களின் வ் விபரங்களை அனுப்பவும் என்றும் அந்த மெசேஜில் இருந்திருக்கிறது.

உள்ளாடைக்கு ஆசைப்பட்டு உடலையே காட்டவேண்டிய கதிக்கு ஆளான பெண்!

உள்ளாடை இலவசமாக வருகிறதே என்று நினைத்த அந்தப்பெண், தனது முகவரியுடம் விபரங்களை அனுப்பி இருக்கிறது. அடுத்து வந்த மேசேஜில், உங்களது புகைப்படம் வேண்டுமென்று இருந்திருக்கிறது. அதற்கும் உடனே புகைப்படம் அனுப்பி இருக்கிறார்.

அதற்கு அடுத்து ஒரு மேசேஜ் வந்திருக்கிறது. இலவச உள்ளாடை அனுப்பிவிட்டதாக மேசேஜ் வந்திருக்கும் என்று ஆசையாக படித்து பார்த்தவருக்கு அதிர்ச்சி. முதலில் போட்டோ அனுப்பி வைக்கவும் என்று வந்த மெசேஜ் போக, உங்களது நிர்வாண புகைப்படம் அனுப்பி வைக்கவும் என்று இருந்திருக்கிறது. அப்பெண் எதுவும் செய்யாமல் இருந்திருக்கிறார். ஏமாற்று கும்பல் என்பதை உணர்ந்த அப்பெண் இனி எதற்கும் ரிப்லே செய்யக்கூடாது என்ற முடிவில் இருந்திருக்கிறார்.


ஆனால், அந்த பெண் அனுப்பிய போட்டோவை மார்பிங் செய்து நிர்வாணமாக இருப்பது மாதிரியான போட்டோக்களை அனுப்பி, உன் நிர்வாண படத்தை அனுப்பாவிட்டால் இந்த மார்பிங் படங்களை இணையத்தில் வைரலாக்கிவிடுவேன் என்ற மிரட்டல் வந்திருக்கிறது.

அந்த மிரட்டலுக்கு பயந்து அவர்கள் இழுத்த இழுப்புக்கு எல்லாம் போகாமல், போலீசுக்கு போயிருக்கிறார் அப்பெண்.

போலீசார் அந்த ஆன்லைன் மோசடி கும்பலை தேடி வருகிறார்கள்.