ராகுலாவது தவறை ஒப்புக் கொண்டுவிட்டார்…ஆனால், பாஜக..? எச்.ராஜாவுக்கு கேள்வி

 

ராகுலாவது தவறை ஒப்புக் கொண்டுவிட்டார்…ஆனால், பாஜக..? எச்.ராஜாவுக்கு கேள்வி

ஜல்லிக்கட்டை தடை செய்த ராகுல் இன்று ஜல்லிக்கட்டு பார்க்க வந்துள்ளது தமிழக மக்களை ஏமாற்றும் வெட்கம்கெட்ட செயல் என்று பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கடுமையாக சாடி இருக்கிறார்.

ராகுலாவது தவறை ஒப்புக் கொண்டுவிட்டார்…ஆனால், பாஜக..? எச்.ராஜாவுக்கு கேள்வி

இதையடுத்து காங்கிரசார் சிலர், காங்கிரஸ் ஆட்சியில் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆனால், பாஜக ஆட்சியில்தான் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை என்றனர். அதற்கு, காங்கிரஸ் அமைச்சர் செய்த வேலையால்தான் பாஜக ஆட்சி்யில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது என்று சொல்லி வந்தனர்.

இன்று ஜல்லிக்கட்டு விளையாட்டை பார்த்த ராகுல்காந்தி, நான் ஜல்லிக்கட்டை பார்த்தேன். தமிழ் மக்கள் ஏன் ஜல்லிக்கட்டை ஊக்குவிக்கிறார்கள் என்பது இப்போதுதான் தெரிந்தது. ஜல்லிக்கட்டு காளைகளை துன்புறுத்தும் என்று முதலில் என்னிடம் சொன்னார்கள். இன்று நேரடியாக நான் பார்த்தவரைகும் சொல்கிறேன்.. அதற்கான வாய்ப்பே இல்லை என்றார்.

ராகுலாவது தவறை ஒப்புக் கொண்டுவிட்டார்…ஆனால், பாஜக..? எச்.ராஜாவுக்கு கேள்வி

இதனால், ராகுல்காந்தியாவது தவறை ஒப்புக்கொண்டுவிட்டார். அவர்தான் தலைவர். ஆனால், பணமதிப்பிழப்பு, கருப்பு பணம் எதிலும் தவறை ஒப்புக்கொள்ளாதது பாஜக என்றும்,

ராகுல் செய்தது வெட்கம்கெட்ட செயல் அல்ல. பஞ்சு பொங்கல் செய்த பாஜக வேலைதான் வெட்கம் கெட்ட செயல் என்றும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

https://twitter.com/AbdhahirJagabar/status/1349685391717142529