சென்னை வரும் ஜெ.பி.நட்டாவை மாட்டுவண்டியில் அழைத்துச் செல்ல ஏற்பாடு

 

சென்னை வரும் ஜெ.பி.நட்டாவை மாட்டுவண்டியில் அழைத்துச் செல்ல ஏற்பாடு

பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று 14.1.2021ல் சென்னை வருகிறார். மாலை 4 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அவரை கட்சி நிர்வாகிகள் மேள தாளங்கள் முழங்க, கலை நிகழ்ச்சிகளோடு வரவேற்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

சென்னை வரும் ஜெ.பி.நட்டாவை மாட்டுவண்டியில் அழைத்துச் செல்ல ஏற்பாடு

விமான நிலையத்தில் இருந்து அவர் நேராக சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ள ‘நம்ம ஊரு பொங்கல் விழா’நிகழ்ச்சியில் மாலை 5 மணிக்கு பங்கேற்கிறார் ஜெ.பி.நட்டா. அவருக்கு பூர்ண கும்ப மரியாதையோடு வரவேற்க ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் மதுரவாயலில் இதற்கான பிரமாண்டமான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பொங்கல் வைக்கும் விழா, தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் சிறுவர், சிறுமியர்களுக்கான பொழுதுபோக்கு விளையாட்டுக்கான ஏற்பாடுகளும் இங்கே நடந்து வருகின்றன.

இந்த விழாவுக்காக மதுரவாயல் வரும் ஜெ.பி.நட்டாவை, முக்கிய சந்திப்பில் இருந்து மாட்டு வண்டியில் அழைத்துச்செல்ல பாஜகவினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

இதையடுத்து மாலை 6 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் துக்கக் பத்திரிகை விழாவில் பங்கேற்கிறார். விழா முடிந்ததும் சென்னை விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்படுகிறார்.

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா
சென்னை வருகை (14 ஜனவரி 2021) – நிகழ்ச்சி நிரல்

மாலை 4.00 மணி – சென்னை விமான நிலையம் / வரவேற்பு

மாலை 5.00மணி – மதுரவாயல்/நம்ம ஊரு பொங்கல் விழா

மாலை 6.00 மணி – கலைவாணர் அரங்கம் /’துக்ளக்’ பத்திரிக்கை விழா