‘2010 ஆம் ஆண்டே சொன்னேன்… இன்றுவரை மெத்தன போக்கு இருப்பது வேதனை’ : நடிகர் விவேக் உருக்கம்!

 

‘2010 ஆம் ஆண்டே சொன்னேன்… இன்றுவரை மெத்தன போக்கு இருப்பது வேதனை’ : நடிகர் விவேக் உருக்கம்!

ஆழ்துளைக் கிணற்றின் அருகில் சுரங்கம்  போல குழி தோண்டப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆழ்துளைக் கிணறு  விவகாரத்தில் இன்றுவரை மெத்தனம் அப்படியே இருப்பது மிக மிக வேதனையான அவலம் என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். 

surjith

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள  நடுக்காட்டுப்பட்டியில்  சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை தனது வீட்டின் தோட்டத்திலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு விழுந்த அந்த குழந்தையை மீட்க கடந்த 66 மணிநேரத்தை கடந்து மீட்பு படையினர் முயற்சி செய்து வருகின்றனர்.  தற்போது ஆழ்துளைக் கிணற்றின் அருகில் சுரங்கம்  போல குழி தோண்டப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரிக் இயந்திரம் பழுதானதால் தற்போது போர்வெல் மூலம் துளையிட்டு பின்பு மீண்டும் ரிக் இயந்திரம்  மூலம் பள்ளம் அகலப்படுத்தப்படவுள்ளது.

 

இந்நிலையில் குழந்தை சுர்ஜித் குறித்து நடிகர் விவேக் மீண்டும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘2010ல் வந்த பலே பாண்டியா படத்தில் ஆழ் துளைக் கிணறு பற்றி, சொன்னேன். ஆனால் இன்று வரை அந்த மெத்தனம் அப்படியே இருப்பது மிக மிக வேதனையான அவலம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.