”திமுக சார்பில் 200 தொகுதிகளில் போட்டியிட வேண்டும்” – அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருப்பம்

 

”திமுக சார்பில் 200 தொகுதிகளில் போட்டியிட வேண்டும்”  –  அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருப்பம்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் , திமுக 200 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என தான் விரும்புவதாக திருவெறும்பூர் எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

”திமுக சார்பில் 200 தொகுதிகளில் போட்டியிட வேண்டும்”  –  அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருப்பம்

திருச்சியில், இணையவழி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொரு தொகுதிக்கும் 10 ஆயிரம் பேரை புதிய உறுப்பினர்களாக சேர்க்க தலைமை அறிவுறுத்திய நிலையில், அந்த இலக்கை தாண்டி உறுப்பினர்களை சேர்க்க உள்ளதாக கூறினார்.

”திமுக சார்பில் 200 தொகுதிகளில் போட்டியிட வேண்டும்”  –  அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருப்பம்

வரும் தேர்தலில் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் போட்டியிட ஆர்வமாக உள்ளோம் என்றும், ஆனால் தலைமை எடுக்கும் முடிவுக்கு ஏற்று
செயலாற்றுவோம் என்றும் தெரிவித்தார்.

”திமுக சார்பில் 200 தொகுதிகளில் போட்டியிட வேண்டும்”  –  அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருப்பம்

சட்டசபை நிகழ்வுகளில் ஆளுங்கட்சிக்கு சாதகமான நிகழ்வுகள் மட்டுமே தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதாகவும் அன்பில் மகேஷ் குற்றம் சாட்டினார். வரும் தேர்தலில் திமுக சார்பில் 200 தொகுதிகளில் நிற்க வேண்டும் என்பது தனது விருப்பம் எனவும் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.