ஊடகங்களை மிரட்டுவதும், மமதையும் அதிமுக அமைச்சர்களுக்கு வழக்கமானதுதான்… ஸ்டாலின்

 

ஊடகங்களை மிரட்டுவதும், மமதையும் அதிமுக அமைச்சர்களுக்கு வழக்கமானதுதான்… ஸ்டாலின்

பத்திரிகையாளர் சந்திப்பின் போது சன் டிவி மைக்கைத் தூக்கி வீசியிருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். அதிமுக அமைச்சரவையையே மக்கள் தூக்கி வீசும் காலம் நெருங்கி வருகிறது என்று தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், ஊடகங்களை மிரட்டுவதும், மமதையும் அதிமுக அமைச்சர்களுக்கு வழக்கமானதுதான்; மக்களின் எதிர்வினை தேர்தலில் எதிரொலிக்கும் என்கிறார்.

ஊடகங்களை மிரட்டுவதும், மமதையும் அதிமுக அமைச்சர்களுக்கு வழக்கமானதுதான்… ஸ்டாலின்

தனது விராலிமலை தொகுதியில் உள்ள ஒருலட்சம் மக்களுக்கு பொங்கல் சீர் என்று வெண்கல பானையும், அரிசி, வெல்லம், கரும்பு என்று பொங்கல் பையும் கொடுத்து வருகிறார் விஜயபாஸ்கர்.

ஊடகங்களை மிரட்டுவதும், மமதையும் அதிமுக அமைச்சர்களுக்கு வழக்கமானதுதான்… ஸ்டாலின்

ஊழல் பணத்தை மறைப்பதற்காக இப்படி செய்வதாக திமுகவினர் பலரும் சொல்லிவந்த நிலையில், சன் டிவியும் அமைச்சரின் பொங்கல் சீர் குறித்து விமர்சித்தது. இதனால் ஆத்திரத்தில் இருந்த அமைச்சர்விஜயபாஸ்கர், இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது, சன் டிவி மைக்கை எடுத்துவிட சொல்லிக்கொண்டே, அவரே எடுத்து வீசினார்.

ஊடகங்களை மிரட்டுவதும், மமதையும் அதிமுக அமைச்சர்களுக்கு வழக்கமானதுதான்… ஸ்டாலின்

அமைச்சரின் இந்த செயலுக்கு ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.