தொடர்ச்சியான போராட்டத்தில் வெற்றி கண்டிருப்பது ஆறுதலையும், நம்பிக்கையையும் தருகிறது… சீமான்

 

தொடர்ச்சியான போராட்டத்தில் வெற்றி கண்டிருப்பது ஆறுதலையும், நம்பிக்கையையும் தருகிறது… சீமான்

இலங்கை இறுதிப்போரின்போது பலியான தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 2019ம் ஆண்டில் நினைவிடம் அமைக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு அன்று இந்த நினைவிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. அரசு உத்தரவின் பேரில்தான் இது நடந்ததாக பலரும் கண்டனம்தெரிவித்து வந்தனர்.

இதை கண்டித்து சென்னையில், வைகோ தலைமையில் பல்வேறு கட்சியினர் நேற்று இலங்கை துணை தூதரகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தொடர்ச்சியான போராட்டத்தில் வெற்றி கண்டிருப்பது ஆறுதலையும், நம்பிக்கையையும் தருகிறது… சீமான்

இலங்கையிலும் மாணவர்கள், தமிழ் அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டங்கள், கோரிக்கைகளினை ஏற்ற பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிவகொழுந்து ஸ்ரீ சத்குணராஜா, மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சிங்களப் பேரினவாதத்தால் மிக மோசமான பேரழிவினைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அதிலிருந்து வெகுவிரைவாக மீண்டெழும் தனது உயிர்ப்புமிக்கப் போர்க்குணத்தையும், போராட்ட உணர்வையும் தமிழ் இளந்தலைமுறையினர் இழந்துவிடவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நினைவிட மீட்புப்போராட்டம் அமைந்தது போற்றுதற்குரியது என்கிறார்.

மேலும், சிங்களப் பேரினவாத அரசின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, சிங்களக் கைப்பாவையாகச் செயல்படும் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் , வழிகாட்டுதலின் கீழ் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை மீண்டும் அதே இடத்தில் நிறுவ யாழ் பல்கலைகழக மாணவர்கள்
தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து அதில் வெற்றி கண்டிருப்பது ஆறுதலையும், நம்பிக்கையையும் தருகிறது என்று சொல்லும் சீமான்,

ஈழத்தாய்மண் வீரமும், மானமும் கொண்ட மாவீரர்களை ஈன்ற மாண்பமை நிலம் என்பதையும், அது இனவெறியாதிக்கத்திற்கு ஒருபோதும் அடிபணிந்து செல்லாது என்பதையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் இராணுவம், காவல்துறை, புலனாய்வுத்துறை என எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும் சிறிதும் அஞ்சாமல்
துப்பாக்கி முனைகளுக்கு இடையில் மன உறுதிமிக்கப் போராட்டத்தை முன்னெடுத்து, அப்போராட்டத்தில் வெற்றிப்பெற்றுள்ள யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எனதன்பு தம்பி, தங்கைகளுக்கு எனது புரட்சிகர வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் உளப்பூர்வமாக உரித்தாக்குகிறேன் என்கிறார்.