ஹாஸ்பிடல் போன கேப்பில் 200 சவரன் நகையை ஆட்டையை போட்ட கும்பல்!
Dec 4, 2020, 08:28 IST1607050716000
உத்தண்டி கண்டிகையில் ஒப்பந்ததாரர் வீட்டில் 200 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் பொன்னேரி அருகே உத்தண்டி கண்டிகையில் வசித்து வருபவர் முனிநாதன். இவர் ஒப்பந்ததாரராக உள்ளார். இந்நிலையில் முனிநாதன் வீட்டில் 200 சவரன், 6 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ. 2.5 லட்சம் ரொக்கத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மச்சான் உடல் நலம் சரியில்லாததால் முனி நாதன் மருத்துவமனைக்கு சென்றபோது கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது. வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 6 கிலோ வெள்ளி, ரொக்கத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தடயங்களை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர்.